“100 நாட்களுக்கு பின்னர்தான் ஊதியம்”  - பிக்பாஸ் சாக்ஷி

 “100 நாட்களுக்கு பின்னர்தான் ஊதியம்”  - பிக்பாஸ் சாக்ஷி
 “100 நாட்களுக்கு பின்னர்தான் ஊதியம்”  - பிக்பாஸ் சாக்ஷி

தொலைக்காட்சி நிர்வா‌கம் தன் மீது பொய்யான புகார் அளித்திருப்பதாக பிக்பாஸ் மதுமிதா குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதுகுறித்து நடிகை சாக்ஷி புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஆடை வடிவமைப்பின் ஃபேஷன் ஷோ இன்று நடைபெற்றது. இதில் பிக்பாஸ் சாக்ஷி, மீரா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இயக்குனர் பா. ரஞ்சித் மனைவி வடிவமைத்த ஆடையை அணிந்து ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சாக்ஷி அகர்வால். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுமிதா செய்த செயல் மிகவும் தவறு. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் காண்ட்ராக்டில் கையொப்பமிடும் போது நிகழ்ச்சியை விட்டு வெளியேறி 100 நாட்களுக்கு பின்னர்தான் ஊதியம் வழங்கப்படும் என்று தெளிவாக தெரியப்படுத்தி இருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. இதன் மூலம் எனக்கு அதிக ரசிகர்கள் கிடைத்துள்ளனர்” எனத் தெரிவித்தார். 

அவரைத் தொடர்ந்து பேட்டியளித்த மீரா மிசுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தது சற்று வருத்தம் அளிப்பதாகவும். வெளியே வந்தபிறகு தனக்கு இரண்டு படங்கள் கால்சீட் கிடைத்துள்ளதாகவும் குறிப்பாக சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி இருவருடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com