பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஆரி நடிக்கும் புதிய படம்! - வெளியானது அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஆரி நடிக்கும் புதிய படம்! - வெளியானது அறிவிப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஆரி நடிக்கும் புதிய படம்! - வெளியானது அறிவிப்பு

’பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் ஆரியின் புதிய பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

நடிகர் ஆரி முதன்முறையாக இயக்குநர் ஷங்கர் தயாரித்த ‘ரெட்டச்சுழி’ படத்தின் மூலம்தான் ஹீரோவாக அறிமுகமானார். ’மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ’நெடுஞ்சாலை’, ’மாயா’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர், விஜய் டிவியின் ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியின் மூலம் டைட்டில் வின்னர் ஆனார். அவரின் நேர்மையான அணுகுமுறையும் துணிச்சலுடன் கருத்தை பதிவு செய்ததும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தக் குணத்திற்காகவே, அவருக்கு 16 கோடி மக்களுக்கு மேல் வாக்களித்து டைட்டில் வின்னராக்கினர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஆரி என்ன செய்யப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், அறிமுக இயக்குநர் அபின் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க ஆரி ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனால் எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

வித்யா பிரதீப் ஹீரோயினாக நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்குழுவில் இருந்த ஸ்டெர்லின் சத்யா இசையமைக்கிறார். இன்று நடந்த படத்தின் பூஜையில் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com