BIGG BOSS Day 57 | ‘இது அழுகை அல்ல... அதையும் தாண்டி’ - பூர்ணிமாவின் கண்ணீருக்கான டிக்‌ஷ்னரி!

மாயா, “கவலைப்படாதே பூர்ணிமா, அடிச்சு நொறுக்குங்க... உங்க கொள்கை எல்லாத்தையும் மூட்டைகட்டி வச்சுடுங்க..” என்று சொன்ன சமயம் பூர்ணிமா அழுதுவிட்டார்.
பிக்பாஸ் பூர்ணிமா
பிக்பாஸ் பூர்ணிமாவிஜய் டிவி

பிக்பாஸ் சீசன் 7 லில் 57ம் நாள் -

விஷ்ணுவைப்பற்றி பூர்ணிமாவிடம் கொளுத்திப்போட்ட விசித்திரா!

ஸ்மால் பாஸ் வீட்டில் விசித்திரா, பூர்ணிமாவிடம், “விஷ்ணுவை பத்தின ரகசியம் ஒன்னு சொல்றேன் கேளு... இந்த அனன்யா பொண்ணு உள்ளே வந்ததும், விஷ்ணு என்கிட்ட வந்து, ‘யாரு மேம் இது?’ன்னு கேட்டான், நானும் ‘யார்டா?’ ன்னு கேட்டதுக்கு, அவன் கண்ணால ஜாடை காட்டி, ’அனன்யா... இவ.. எப்படி... ஓகேவா? மார்டனா இருக்குது, சமையலும் பண்ணுது... செட் ஆகுமா?’ அப்படின்னு அதுக்கு ரூட் விட்டான்” என்று கொளுத்தி போடவும்,

“ஏண்டா டேய்... இது வேற நடக்குதா? கல்யாணாத்துக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கியா நீ” என்றார் பூர்ணிமா.

‘இப்பதான் எனக்கும் பூர்ணிமாவுக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்திருக்கு. இதற்கு நடுவுல, இவங்க வந்து ஆட்டத்த கலச்சுடுவாங்க போலேயே’ என்று பதறிய விஷ்ணு, “மேம் நீங்கவேற சும்மா இருங்க மேம்... பூர்ணிமா என்னை தப்பா நினைக்கப்போகுது....” என சொல்லிவிட்டு, பூர்ணிமாவிடம். “அது இப்போ இல்ல பூர்ணிமா... அது முதல்வாரம், அப்புறம்தான் அது போயிடுச்சே...” என்று விசித்திரா தோண்டிய பள்ளத்தை மீண்டும் மூடினார் விஷ்ணு.

விஷ்ணு
விஷ்ணு

இருந்தாலும் விடுவாங்களா விசித்திரா?

“இவனை நம்பாதே பூர்ணிமா, அவன் அந்த பொண்ணுக்கு ரூட் விட்டான். அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியல. அது என்கிட்ட வந்து கோபப்பட்டுச்சு” என்றார் மீண்டும்.

தவளை தன் வாயாலே கெடும் என்ற கதையா, “நீங்க அதுகிட்ட டாட்டூ பத்தி கேட்டு பாத்தீங்கல்ல, அதனால அதுக்கு கோபம்” என்றார் விஷ்ணு.

“நான் அதுகிட்ட டாட்டூ பத்தி கேட்டது உனக்கு எப்படி தெரியும்? அப்போ அது உன்கிட்ட சொல்லி இருக்கு... டேய்... இப்ப ஒத்துக்கறீயா?” என்று கேட்டார் விசித்திரா.

அனன்யா
அனன்யா

“அது வந்து... அது வந்து... இல்ல பூர்ணிமா, இது பொய். நான் எல்லார் பத்தியும் தெரிஞ்சுக்க நினைச்சுதான் அதுகிட்ட பேசினேன். வேற ஒன்னும் இல்ல..” என்று மழுப்பி பேசி, கூரையை ஒட்டுப்போட்டு நிக்க வச்சு இருக்கார் விஷ்ணு! பார்ப்போம் கூரை நிக்குதா இல்லை கீழே சாயுதான்னு.

நிக்சனுக்கு வந்த சோதனை!

இத்தனை வாரமாக இல்லாமல் இந்த வாரம் ஒரு புது ட்விஸ்ட் அறிமுகப்படுத்தியுள்ளார் பிக்பாஸ். நிக்சன் கேப்டனாக பதவி ஏற்ற நேரமா அல்லது பிக்பாஸின் சூழ்ச்சியா என்று தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டிற்கு நடுவில் ஒரு நீதி மணி ஒன்றை வைத்துள்ளார். “கேப்டனின் நிர்வாகம் சரி இல்லை என்று நினைத்தால், அதாவது தனி ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று நினைத்தாலோ அல்லது இந்த கேப்டன்ஷிப்பில் தவறு நடந்துள்ளது என்று நினைத்தாலோ, கேப்டன் சரிவர செயல்படவில்லை என்று நினைத்தாலோ நியாயம் கேட்டு இந்த மணியை அடிக்கலாம். புகார் உண்மையும் நம்பகத்தன்மையுமாக இருந்தால், நிக்சனின் கேப்டன்ஷிப் பதவி பறி போய்விடும். வேறு கேப்டன் தேர்ந்தெடுக்கப்படுவர்” என்று பிக்பாஸ் கூறிவிட்டார்.

இதைக்கேட்டதும் நிக்சனின் முகம் வாடியது, அவருக்கென்ன... நமக்கே நிக்சனின் நிலையை நினைத்து பாவமாக இருந்தது. பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள் யாரை எப்படி வெளியில் அனுப்புவது என்பதிலேயே குறியாக இருக்கும் சமயத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட். நிக்சனை எப்படி கவிழ்ப்பது என்பதில் மாயா, தினேஷ், விஷ்ணு இப்படி பலர் இன்னும் கூடுதல் மும்மரத்தோடு குறியாக இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நிக்சன்
நிக்சன்

ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றவர்கள் யார் யார்?

நிக்சன் கேப்டன்ஷிப் எடுத்ததும் அவரது முதல் வேலை 6 பேரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்புவது. அப்படி விக்ரம், அர்ச்சனா, பூர்ணிமா, விஷ்ணு, கூல் சுரேஷ், விஜய் ஆகியோரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பினார் நிக்சன்.

இது அழுகை அல்ல... அதையும் தாண்டி புனிதமானது!

இதில் பூர்ணிமா மறுபடி ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்வது பிடிக்காமல் கவலையுடன் விசித்திராவின் தோள் மீது சாய்ந்திருக்க, அங்கு வந்த மாயா, “கவலைப்படாதே பூர்ணிமா, அடிச்சு நொறுக்குங்க... உங்க கொள்கை எல்லாத்தையும் மூட்டைகட்டி வச்சுடுங்க..” என்று சொன்ன சமயம் பூர்ணிமா அழுதுவிட்டார்.

பூர்ணிமா
பூர்ணிமா

ஆனால் தான் அழுவதை ஒத்துக்கொள்ளாமல் “இது என்ன கருமம் என் கண்ணுலேர்ந்து தண்ணி தண்ணியா வருது” என்கிறார்.

ஏம்மா தெரியாமதான் கேட்கிறோம் கண்ணுலேர்ந்து தண்ணீர் வந்த ரெண்டு காரணம்தான். ஒன்னு சளி பிடிச்சு இருக்கணும், இல்ல அது அழுகையா இருக்கணும். எங்களுக்கு தெரிஞ்சு உங்களுக்கு சளி பிடிக்கல; அப்போ அது அழுகைதானே? உங்களை எல்லோரும் சேர்ந்து ஓரம் கட்டியதை மனசு ஒத்துக்கொள்ளாமல் உங்களை அறியாமல் நீங்க அழுதா... அது அழுகை இல்ல... கண்ணுலேர்ந்து தண்ணி தண்ணியா கொட்டுது; அதே சமயம், நீங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து புதுசா வீட்டுக்கு வந்த அர்ச்சனாவை டார்க்கெட் பண்ணும் போது, அவங்க அழுதாங்கல்ல, அப்போ அவங்க கண்ணுலேர்ந்து தண்ணீதாம்மா வந்தது. அத போய் அழுமூஞ்சி, இன்னும் அழ ஆரம்பிக்கலையான்னு உங்க கேங் கேட்டது உங்களுக்கு நியாபகம் இருக்கா...? பூர்ணிமா? இதுதான் பூமராங்ன்னு சொல்லுவாங்க...!

பூர்ணிமா
பூர்ணிமா

சரி இவங்க கண்ணுலேர்ந்து அருவி மாதிரி கொட்டுற தண்ணியுடன் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு போனாங்களா... அடுத்து என்ன என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com