BIGG BOSS Day 19 | ’இது விளையாட்டு; சிலர் முதுகில் குத்தத்தான் செய்வார்கள்’ வினுஷாவிற்கு நடந்ததென்ன?

வீட்டிலிருப்பவர்களிடம் ’நான் நல்ல மருமகள்’ என்று பெயர் எடுக்க முயன்றுகொண்டிருப்பதைப்போல் தோன்றுகிறது.
பிக்பாஸ்
பிக்பாஸ்vijay tv

பிக்பாஸில் நேற்று..!

வீட்டிற்குள் இரு வேறு பிரிவினருக்கும் இடையில் பல பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கின்றன. பிரச்னைகளை எல்லாம் மறந்து அடுத்தடுத்த டாஸ்கில் அனைவரும் சேர்ந்து விளையாடினாலும் சிலர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நன்கு தெரிகிறது. வினுஷாவும் அதில் ஒன்று.

வினுஷா
வினுஷாvijay tv

இரண்டு நட்களாக அவர் தனிமையில் இருப்பதைப்போல உணர்ந்திருந்திருக்கிறார். தனக்கென்று ஒரு பாய் தலைகாணியை தரையில் விரித்து, வயிற்றுவலி என்று படுத்துவிட்டார். இது பார்ப்பதற்கு வீட்டிலிருக்கும் மாமியார் நாத்தனாருக்கு பயந்து வேலை செய்யும் மருமகளைப் போல, ஸ்மால் பாஸ் வீட்டிலிருக்கும் மாயா, பூர்ணிமா, பிரதீப் போன்றவர்கள் கட்டளையிடும் வேலைகளைப் பார்த்துக்கொண்டு, ’என் துக்கத்தை நான் யாரிடம் சென்று சொல்லுவேன்’ என்பதைப்போல அழுதுக்கொண்டு, உடல்நலம் சரியில்லாமல் படுத்துவிட்டார். வீட்டிலிருப்பவர்களிடம் ’நான் நல்ல மருமகள்’ என்று பெயர் எடுக்க முயன்று கொண்டிருப்பதைப்போல் தோன்றுகிறது.

மாயா அவரை வந்து தேற்றுகிறார். பிரதீப் வினுஷாவிடம், “நீ கேம கேமா பாரு, அதவிட்டு பர்சனலா மனசுல எடுத்துகிட்டு அழுதுட்டு உட்கார்ரது, கஞ்சி குடிக்கிறது இப்படி எல்லாம் இருக்கக்கூடாது. நான் வந்ததும் உன்னதான் கிட்சனுக்கு கேப்டனா போட சொல்லி உனக்கு ஒரு பொறுப்பை தந்தேன். அதுல நீ நல்லா விளையாடி இருக்கலாம். அத உன்னால சரியாகூட செய்ய தெரியல. என்னை பொருத்தவரைக்கும் நீ மக்கு, நான் மக்கோட போட்டி போடமாட்டேன், புத்திசாலிகளுடன் போட்டி போட்டு தான் வெற்றி பெறுவேன்” என்று பிரதீப் ஆணித்தனமாக வினுஷாவின் மனதில் அறையும் படி கூறினார். சில பேருக்கு, சூடான வார்த்தைதான் அவர்களை பொசுக்கி அவர்கள் யார் என்று நிரூபிக்கும். அதுபோல தான் பிரதீப்பும். வினுஷாவிடம் கொஞ்சம் சூடாகதான் பேசினார்.

vijay tv

பிக்பாஸ் வினுஷாவை கன்ஃபக்‌ஷன் ரூமிற்கு அழைத்து பேசினார். வினுஷா முதலில் தான் வீட்டிற்கு போகவிரும்புவதாக கூறினார். ஆனால் பிக்பாஸ் மூளைச்சலவை செய்து மீண்டும் வினுஷாவை ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கிறார். ஆனால் வெளியில் வந்ததிலிருந்து வினுஷா தன் விளையாட்டை ஆரம்பித்துவிட்டார் என்றே சொல்லலாம். ஆம்.. நான் வீட்டிற்கு போக பிக்பாஸ் சரி என்று சொல்லிவிட்டார் அதனால் நான் வீட்டிற்கு போறேன் என்றதும், ஒருசிலரை தவிர அனைவரும் வினுஷாவிற்கு விடைக்கொடுத்தனர். இதில் யார் உண்மையானவர் என்பதை வினுஷா உணர்ந்து கொண்டதாகவே தோன்றுகிறது.

விசித்திரா, வினுஷாவிடம், ”நீ எடுத்தது தவறான முடிவு, விளையாட்டு என்று வந்து விட்டால் இங்கு சிலர் முதுகில் குத்தத்தான் செய்வார்கள், சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும், அதையும் தாண்டி நின்று வெற்றி பெற்று காட்ட வேண்டும்” என்று சொன்னதும், வினுஷா ”என் மேக்கப்பாக்ஸ் இங்கு தான் இருக்கும் நா அத தரமாட்டேன்” என்று மணியிடம் சொல்கிறார். “மணியும் அப்ப நீ இங்க தான் இருக்கப்போறீயா” என்று சந்தோஷப்படுகிறார்.

NGMPC22 - 147

அடுத்து பஸில்ஸ் டாஸ்க் நடக்கிறது. அதில் பிக்பாஸ் வீட்டினர் தோல்வி அடையவே, வழக்கம் போல பிக்பாஸ் போட்டியாளார்களின் மாற்று உடை அனைத்தையும் கொண்டு சென்று விடுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com