“பிக்பாஸில் என்னை கொடுமைப்படுத்தினார்கள்”- மதுமிதா போலீஸில் புகார்

“பிக்பாஸில் என்னை கொடுமைப்படுத்தினார்கள்”- மதுமிதா போலீஸில் புகார்
“பிக்பாஸில் என்னை கொடுமைப்படுத்தினார்கள்”- மதுமிதா போலீஸில் புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியாக மதுமிதா புகார் அளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்- 3 நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்த நடிகை மதுமிதா, தனக்குத் தானே தீங்கு விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகளை மீறியதாகவும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியாக மதுமிதா நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், ஆனால் தொகுப்பாளர் கமல்ஹாசனும் கூட அதனை கண்டிக்கவில்லை எனவும் தபால் மூலம் அவர் புகார் அளித்துள்ளார். தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56-வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com