"அவ கையால ஒரு கப் காபி.. அவ்ளோ தான் வாழ்க்கை" - பராதிராஜா எமோஷனலாக பதிர்ந்த காதல் கதை
தேனி மாவட்டம் அல்லிநகரத்திலிருந்து சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற கனவோடு புறப்பட்டுவந்த சின்னசாமி, பின்னர் தமிழ் சினிமாவையே மாற்றியமைத்தார். இயக்குநர் இமயமாக தமிழ் திரையுலகை கண்டியாண்ட பாரதிராஜா, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 84 வயதில் நேற்று காலமானார்.
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்ட பாரதிராஜாவின் உடல், வத்தலகுண்டு அருகே காட்ரோட்டில் உள்ள அவரது பண்ணை வீட்டில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு அங்குள்ள தோட்டத்தில், அரசுமரியாதையுடன் அவரது உடல்நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் பாரதிராஜா ஒருமுறை தன்னுடைய பழைய காதல் குறித்து எமோசலனாக பகிர்ந்துகொண்ட விசயத்தை இங்கே பார்க்கலாம்..
இயக்குநர் கௌதம் மேனன் உடனான நேர்காணல் ஒன்றில் மறைந்த இயக்குநர் பாரதிராஜா பகிர்ந்த காதல் கதையானது, “ஒருநாள் நானும் என் தங்கையும் எங்கேயோ போயிட்டு தேனி வீட்டிற்கு வந்துட்டு இருந்தோம். பூக்கடையில் ஒரு லேடி நிக்குது. வண்டிய நிறுத்துன்ன சொன்னேன். பூக்கடையில் அந்தப் பொண்ணு ஏதோ வாங்கிட்டு இருந்தா. அவளின் பின்புறம் மட்டும் பார்த்துட்டு என் சிறு வயது காதலி மாதிரி இருக்கே என்று தங்கையிடம் சொன்னேன். அவ திரும்பி பார்த்ததும் ஷாக்.
அது அவளே தான். எப்ட்றா இத்தனை வருஷம் கழித்து நரச்ச தலைமுடிய வச்சி சொல்லிட்டே என்று தங்கை கேட்டா. அதான் லவ்.
அந்த அம்மா கிட்ட வந்து பேத்தி கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்க வந்தேனு சொல்லுச்சு. கண்ணெல்லாம் கலங்கிட்டேன். அப்புறம் ஒருநாள் வீட்டுக்கு வந்துச்ச கல்யாணத்துக்கு வந்துருங்கனு சொன்னுச்சு. காபி சாப்பிடுறியாம்மானு கேட்டேன் ஆனா அந்தம்மாவே எங்களோட கிச்சனுக்கு போயி காபி போட்டு வந்து கொடுத்துச்சு. அந்த காபிய வாங்குன பாருங்க.. அங்கயே என்னுடைய வாழ்க்கை முடிஞ்சிடுச்சு. அவ கையால ஒரு கப் காபி. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை..
அதுக்கு பேருதான் காதல். அந்த நினைவு இன்னும் ஈரமா இருக்கு" என பகிர்ந்திருந்தார்.

