படப்பிடிப்பில் கலந்து கொள்ள பெங்களூரு சென்ற விஜய் சேதுபதி மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்கியவர் மது அருந்தியிருந்ததாக கூறப்பட்ட நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தன்னுடைய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நேற்று விமானம் மூலம் பெங்களூர் சென்றார். விமான நிலையத்திலிருந்து விடுதிக்கு செல்ல வெளியே வந்தபோது, நடிகர் விஜய் சேதுபதி மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தினர். இதில் நிலைகுலைந்த விஜய் சேதுபதி அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் விஜய் சேதுபதியை அழைத்து சென்ற அதிகாரிகள் தாக்குதல் நடத்திய நபரை பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்திய நபர் மது அருந்தி இருந்ததாக அவர் தரப்பில் கூறுகின்றனர். ஆனால், அவர் மீது தாக்குதல் நடத்த என்ன காரணம் என்பது வெளியாகவில்லை. விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.