புதுச்சேரி அரசு சார்பில் ’ஒத்த செருப்பு’ படத்திற்காக இயக்குநர் பார்த்திபனுக்கு விருது

புதுச்சேரி அரசு சார்பில் ’ஒத்த செருப்பு’ படத்திற்காக இயக்குநர் பார்த்திபனுக்கு விருது
புதுச்சேரி அரசு சார்பில் ’ஒத்த செருப்பு’ படத்திற்காக இயக்குநர் பார்த்திபனுக்கு விருது

புதுச்சேரி சார்பில், 2020ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருது ஒத்த செருப்பு படத்தை இயக்கி நடித்த பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது. 

பார்த்திபன் இயக்கத்தில் உருவான படம் 'ஒத்த செருப்பு'. கடந்த ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியில் வரவேற்பை பெற்றது. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை அவரே இயக்கியும் இருந்தார். இவரது இந்த பரீசார்த்த முயற்சிக்கு பலரது தரப்பிலும்க் இருந்து பாராட்டுகள் கிடைத்தது.

இந்த ஆண்டுக்கான இந்தியாவின் ஆஸ்கர் விருது பரிந்துரையில் ஒத்த செருப்பு திரைப்படம் நிச்சயம் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதுக்கான இந்திய பரிந்துரையில் 'gully boy' திரைப்படம் இடம்பெற்றிருந்தது. இது குறித்தான அதிருப்தியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெளிப்படுத்தியிருந்த நிலையில், இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் நவாஸுதீன் நடிக்க இருப்பதாக பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், ஒத்த செருப்பு படத்திற்காக இயக்குநரும், நடிகருமான பார்த்திபனுக்கு புதிச்சேரி அரசு சார்பில் 2020ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.புதுச்சேரி அமைச்சர் ஷாஜகான் விருது வழங்க பார்த்திபன் பெற்றுக்கொண்டார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com