கணினி ஊடுருவல் மூலம் ஆஸ்திரேலிய பாதுகாப்பு திட்டங்கள் திருட்டு

கணினி ஊடுருவல் மூலம் ஆஸ்திரேலிய பாதுகாப்பு திட்டங்கள் திருட்டு

கணினி ஊடுருவல் மூலம் ஆஸ்திரேலிய பாதுகாப்பு திட்டங்கள் திருட்டு
Published on

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த பல முக்கிய தகவல்கள் கணினி ஊடுருவல் மூலம் திருடப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் நடந்துள்ள இந்த ஊடுருவலின் மூலம் அரசாங்க ஒப்பந்ததாரர் வசமிருந்த சுமார் 30 ஜிபி அளவிலான தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதில் புதிய போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் குறித்த தகவல்களும் அடங்கும். இந்தத் தகவல்கள் வர்த்தக ரீதியிலாக மிக முக்கியமானவை. ஆனால் ரகசியத் தகவல் கிடையாது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. கணினியில் ஊடுருவிய மர்ம நபருக்கு ஆஸ்திரேலிய கணினி பாதுகாப்பு அதிகாரிகள் 'ஆல்ஃப்' என்று பெயரிட்டுள்ளனர். கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த கணினி ஊடுருவல் தொடங்கியுள்ளது. ஆனால், நவம்பர் மாதம் வரை கணினி ஊடுருவல் குறித்து ஆஸ்திரேலியாவின் சமிக்ஞைகள் இயக்குநரகம் எச்சரிக்கை செய்யவில்லை. ஊடுருவிய நபர் குறித்த அடையாளம் தெரியவில்லை. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு தொழில் அமைச்சர் கிரிஸ்டோஃபர் பைன் ஏ பி சி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com