'என்னவரை கரம் பிடித்தேன்'- எளிய முறையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்

'என்னவரை கரம் பிடித்தேன்'- எளிய முறையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்
'என்னவரை கரம் பிடித்தேன்'- எளிய முறையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகளுக்கு எளிய முறையில் சென்னையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் தனது இசையால் கலக்கி வருகிறார். மேலும், தேசிய விருதுகள் மட்டுமின்றி ஆஸ்கர் அகாடமி, பாஃப்தா, கிராமி, கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளார். இவர், கடந்த 1995-ம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு, கதீஜா, ரஹீமா என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

இதில் மூத்த மகள் கதீஜாவுக்கும், சவுண்ட் இன்ஜினீயர் ரியாசுதீன் சேக்கிற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்கள் முன்னிலையில், இருவருக்கும் நேற்று மாலை சென்னையில் எளிமையாக திருமணம் நடைபெற்றது.

மகளின் திருமண புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “மணமக்களை எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பாராக. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். புகைப்படத்தில் மணமக்களுடன் ஏ.ஆர். ரஹ்மான், அவரது மனைவி சாய்ரா பானு, இளைய மகள் ரஹீமா, மகன் அமீன் ஆகியோருடன், ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் புகைப்படமும் அருகில் உள்ளவாறு பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

அவரின் மகள் கதீஜா தனது பதிவில், “என் வாழ்வில் நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நாள் இது. என்னவரை கரம் பிடித்தேன்” என பதிவிட்டுள்ளார். இதையடுத்து, சினிமா துறையினரும், ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகர்களும் மணமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். கதீஜா ரஹ்மான், ரஜினியின் ‘எந்திரன்’ படத்தில் வரும் புதிய மனிதா பாடலை, ஏ.ஆர். ரஹ்மான், எஸ்.பி.பி. ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com