ஏ.ஆர்.முருகதாஸ் அலுவலகம் சென்ற ‘தர்பார்’ பட விநியோகஸ்தர்களுக்கு அனுமதி மறுப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் அலுவலகம் சென்ற ‘தர்பார்’ பட விநியோகஸ்தர்களுக்கு அனுமதி மறுப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் அலுவலகம் சென்ற ‘தர்பார்’ பட விநியோகஸ்தர்களுக்கு அனுமதி மறுப்பு

‘தர்பார்’ படத்தின் இழப்பு தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை சந்திக்க அவரது அலுவலகம் சென்ற விநியோகஸ்தர்கள் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வந்தது ‘தர்பார்’ திரைப்படம். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து இருந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. இதனிடையே ‘தர்பார்’ படம் திரையரங்குகளில் போதுமான அளவில் வசூல் ஈட்டவில்லை எனவும் இதன் காரணமாக 65 கோடி ரூபாய் கொடுத்து திரைப்படத்தை வாங்கியிருந்த விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டது.

மேலும், தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை ரஜினிகாந்த் பெற்றுத்தர வேண்டுமென்று அவரை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக தமிழகத்தின் 9 மாவட்ட விநியோகஸ்தர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு கடந்த 30 ஆம் தேதி வந்தனர்.

ஆனால், ரஜினிகாந்த் தரப்பில், விநியோகஸ்தர்களை வேறு தருணத்தில் சந்திப்பதற்கான கெடு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க மறுத்த விநியோகஸ்தர்கள் ரஜினியை சந்தித்துப் பேசிய பிறகு இதுகுறித்த தெளிவான விளக்கத்தினை தர இருப்பதாக கூறிவிட்டு கலைந்தனர்.

இந்நிலையில் ‘தர்பார்’ பட விநியோகத்தில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை இன்று சந்திக்க முற்பட்டனர். ஆனால், அவரது அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி மறுத்தனர். ஆகவே அவர்கள் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com