'அண்ணாத்த’ பட ஷூட்டிங்கில் இருந்துகொண்டே விக்னேஷ் சிவன் படக்குழுவினரை சந்தித்த நயன்தாரா!
ஹைதராபாத்தில் நடந்துவரும் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டே காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படக்குழுவினரை நயன்தாரா ஹோட்டலில் சந்தித்த புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன.
’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினி - நயன்தாரா நடிக்கும் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல, நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்புகளும் தற்போது ஹைதராபாத்தில்தான் நடைபெற்று வருகிறது.
தற்போது, விஜய் சேதுபதி, சமந்தா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி, சமந்தா கலந்துகொண்ட வீடியோக்களை பகிர்ந்து கொண்டார் விக்னேஷ் சிவன். இந்நிலையில், அண்ணாத்த பட ஷூட்டிங்கில் இருக்கும் நயன்தாரா ஓய்வு நேரத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினரை ஓட்டலில் சந்தித்து உணவருந்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.