‘தாதா சாஹேப் பால்கே’ விருது பெற்றார் அமிதாப் பச்சன்

‘தாதா சாஹேப் பால்கே’ விருது பெற்றார் அமிதாப் பச்சன்
‘தாதா சாஹேப் பால்கே’ விருது பெற்றார் அமிதாப் பச்சன்

திரைத்துறையின் உயரிய விருதான ‘தாதா சாஹேப் பால்கே’ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நடிகர் அமிதாப் பச்சன் பெற்றார்.

திரைத்துறைக்கான இந்தியாவின் தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. இதில் திரைத்துறையினர் பங்கேற்று விருதுகளை பெற்றுச்சென்றனர். ஆனால் திரைத்துறையினர் உயரிய விருதான ‘தாதா சாஹேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டிருந்த அமிதாப் பச்சன், அந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.

இந்நிலையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற அமிதாப் பச்சன், தனக்கான ‘தாதா சாஹேப் பால்கே’ விருதை குடியரசுத் தலைவரிடம் பெற்றுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com