தீராத கல்லீரல் பிரச்னை: அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி

தீராத கல்லீரல் பிரச்னை: அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி
தீராத கல்லீரல் பிரச்னை: அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் 3 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அமிதாப்புக்கு, கடந்த 1982-ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தின்போது ஏற்றப்பட்ட ரத்தத்தில் ‘ஹெப்பாடிட்டீஸ் பி’ வைரஸ் இருந்துள்ளது. இதன் விளைவாக அவரது கல்லீரல் 75 சதவீதம் செயலிழந்தது. கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாலும், சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வந்தார்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு திடீரென உடல் நலக்குறைவால் மும்பை சிட்டி மருத்துவமனையில் அமிதாப் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு இணையான தனி அறையில், கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com