ஆஸ்கர் விருது குழு: அமிதாப், ஆமிர்கானுக்கு அழைப்பு

ஆஸ்கர் விருது குழு: அமிதாப், ஆமிர்கானுக்கு அழைப்பு
ஆஸ்கர் விருது குழு: அமிதாப், ஆமிர்கானுக்கு அழைப்பு

ஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைவதற்கு நடிகர் அமீர்கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினரைக் கொண்டு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கும் நோக்கத்தில், 744 புதிய உறுப்பினர்களைச் சேர்க்க அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சைன்ஸ் முடிவுசெய்துள்ளது. இந்திய சினிமாவிலிருந்து, குறிப்பாக பாலிவுட் நடிகர், நடிகைகள் அதிகம் சேர்க்கப்படவுள்ளனர். அமிதாப் பச்சன், அமீர் கான், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, இர்ஃபான் கான், தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் ஆகிய நடிகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மிருணாள் சென், கவுதம் கோஸ் ஆகிய இயக்குநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காஸ்ட்யூம் டிசைனர் அர்ஜுன் பாசின், ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் ஆகியோருக்கும் உறுப்பினராக இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'பிகே' மற்றும் 'கபாலி' படங்களில் சவுண்ட் டிசைனராகப் பணியாற்றிய அம்ரித் பிரீத்தம் தத்தா ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினர் சேர்க்கையில் பன்முகத்தன்மை இல்லை என்ற விமர்சனம் தொடர்ச்சியாக வைக்கப்பட்டதையடுத்து, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக அழைக்கப்பட்டவர்களில் ஏ.ஆர்.ரஹ்மான், ஷர்மிளா தாகூர், ரசூல் பூக்குட்டி, பிரெடா பிண்டோ ஆகியோர் அடங்குவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com