புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் அல்லு அர்ஜுன்

புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் அல்லு அர்ஜுன்
புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் அல்லு அர்ஜுன்

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் அல்லு அர்ஜுன்.

46 வயதான கன்னட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையொட்டி, அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினர். படப்பிடிப்புகளால் பல நடிகர்களால் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.

நடிகர் சூர்யா, ராம் சரண், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், விஷால் உள்ளிட்டோர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ‘புஷ்பா’ படப்பிடிப்பிலும் அதன் வெளியீட்டுப் பணிகளிலிலும் பிஸியாக இருந்த அல்லு அர்ஜுன் ‘புஷ்பா’ வெளியீட்டிற்குப் பிறகு 16 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த வாரம் ஆந்திரா திரும்பியவர், இன்று புனித் ராஜ்குமாரின் அண்ணன் சிவராஜ்குமாரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com