பணமோசடி வழக்கு: நடிகை சோனாக்‌ஷியை கைது செய்ய தடை!

பணமோசடி வழக்கு: நடிகை சோனாக்‌ஷியை கைது செய்ய தடை!

பணமோசடி வழக்கு: நடிகை சோனாக்‌ஷியை கைது செய்ய தடை!
Published on

பண மோசடி வழக்கில் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிரபல இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள். தமிழில், ’லிங்கா’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்திருந்தார். இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி, டெல்லியில் நடந்த ’இந்தியா பேஷன் மற்றும் பியூட்டி விருது’ நிகழ்ச்சி யில் கலந்து கொள்வதற்காக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் பணம் வாங்கியிருந்தார்.

அவருக்கு நான்கு தவணைகளில் ரூ.37 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால், கடைசி நிமிடத்தில் அவர் வர மறுத்துவிட்டார். இதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் போலீஸ் ஸ்டேஷனில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இப்போது மோசடி புகார் கொடுத்தனர். போலீசார், சோனாக்‌ஷி சின்ஹா உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் போலீசார் அவரை கைது செய் யலாம் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து சோனாக்‌ஷி சின்ஹா அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், தன்னை கைது செய்ய தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்தார். மனு வை விசாரித்த நீதிபதி நஹீத் அர மூனிஸ் தலைமையிலான அமர்வு, கைதுக்கு இடைக்கால தடை விதித்தது. போலீசார் விசாரணை அறிக்கை யை தாக்கல் செய்யும் வரை சோனாக்‌ஷி சின்ஹா கைது செய்யப்பட மாட்டார் என்றும் விசாரணைக்கு சோனாக்‌ஷி ஒத்துழைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com