காவல்துறைக்கு சங்கம் வேண்டுமா? - பா. ரஞ்சித் பதில்

காவல்துறைக்கு சங்கம் வேண்டுமா? - பா. ரஞ்சித் பதில்
காவல்துறைக்கு சங்கம் வேண்டுமா? - பா. ரஞ்சித் பதில்
'உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் சங்கம் வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார் பா.ரஞ்சித்.
இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்துள்ள 'ரைட்டர்' படத்தில் சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய பா.ரஞ்சித், ''நீங்கள் எதை எல்லாம் பேச மறுத்தீர்களோ, அதை பேசத்தான் நான் சினிமாவிற்கு வந்தேன்.
முதல் படத்தின் கதையில் நான் செய்த திருத்தங்கள், அதற்கு வந்த பின்னூட்டங்கள் எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் பேசினாலே ஆயிரம் பிரச்னைகள் வரும். சரியாக பேசவில்லை என்றால் இன்னும் பிரச்னைகள் வரும் என்பதை படம் எடுக்கும்போது உணர  வேண்டியிருக்கிறது.
நான் பேசுவது சென்சிட்டிவாக இருக்கலாம்; ஆனால் நான் ஜாலியாதான் பேசுறேன்.என் படத்தில் பணியாற்றும் நடிகர்கள், உதவி இயக்குநர்கள், தொழிநுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இது உண்மை. பல இடங்களில் என்னை சார்ந்தவர்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள்'' என்று அவர் கூறினார்.
காவல்துறைக்கு சங்கம் வேண்டும் என்கிற கருத்து ஏற்புடையதா? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பா.ரஞ்சித், ''உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் சங்கம் வேண்டும். அது ஏற்புடையதுதான் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com