இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்துள்ள 'ரைட்டர்' படத்தில் சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய பா.ரஞ்சித், ''நீங்கள் எதை எல்லாம் பேச மறுத்தீர்களோ, அதை பேசத்தான் நான் சினிமாவிற்கு வந்தேன்.
முதல் படத்தின் கதையில் நான் செய்த திருத்தங்கள், அதற்கு வந்த பின்னூட்டங்கள் எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் பேசினாலே ஆயிரம் பிரச்னைகள் வரும். சரியாக பேசவில்லை என்றால் இன்னும் பிரச்னைகள் வரும் என்பதை படம் எடுக்கும்போது உணர வேண்டியிருக்கிறது.