” எங்கள் குழந்தை அவ்வளவு அழகாக இருக்கிறாள் “ - மகிழ்ச்சியில் ஆலியா - ரன்பீர் தம்பதி!!

” எங்கள் குழந்தை அவ்வளவு அழகாக இருக்கிறாள் “ - மகிழ்ச்சியில் ஆலியா - ரன்பீர் தம்பதி!!
” எங்கள் குழந்தை அவ்வளவு அழகாக இருக்கிறாள் “ - மகிழ்ச்சியில் ஆலியா - ரன்பீர் தம்பதி!!

பாலிவுட்டின் பிரபல ஜோடியான அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இன்றுகாலை மும்பையில் உள்ள ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆலியாவுக்கு மதியம் 12.15 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது.   

“ எங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான செய்து இது. எங்களுடைய குழந்தை அவ்வளவு அழகாக இருக்கிறாள்... அன்பு நிறைந்த ஆசீர்வதிக்கப்பட்ட பெற்றோராக மாறியிருக்கிறோம் “  என  ஆலியா பட் குழந்தையைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். ஒரு அழகான படம் ஒன்றினையும் இணைத்துள்ளார். அதில் ஒரு ஆண் சிங்கமும், பெண் சிங்கமும் தங்களது குட்டியுடன் இருப்பது போல் அந்த போட்டோ குயிட்டாக இருக்கிறது.

"எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகிறது... வாழ்க்கைக்கு நன்றி" என்று ஆலியா பட்டின் தாய் சோனி ரஸ்டான் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களிலும் ஆலியா ரன்பீர் ஜோடிக்கு  வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. அதன்  பின்னர் ஜூலை மாதம் 27-ம் தேதி தான் கருவுற்றிருப்பதை இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலமாக தெரிவித்திருந்தார் ஆலியா பட். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com