தொடரும் பாலியல் புகார்கள்: ஷூட்டிங்கை ரத்து செய்தார் அக்ஷய் குமார்!
நானா படேகரை தொடர்ந்து, தான் நடிக்கும் ’ஹவுஸ்புல் 4’ படத்தின் இயக்குனர் மீதும் பாலியல் புகார்கள் வெளியானதை அடுத்து இன்று நடக்க இருந்த ஷூட்டிங்கை கேன்சல் செய்தார், ஹீரோ அக்ஷய்குமார்.
பிரபல இந்தி பட ஹீரோ அக்ஷய்குமார். இவர் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தில் முக்கிய கேரக்ட ரில் நடித்துள்ளார்.
நடிகை தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்தி திரையுலகை சேர்ந்தவர் பலர் தனுஸ்ரீ-க்கு ஆதரவு தெரிவித்தனர். அதில் அக்ஷய்குமார் மனைவி டிவிங்கிள் கண்ணாவும் ஒருவர். அதைக் கண்ட தனுஸ்ரீ, ’நீங்கள் எனக்கு ஆதரவு தருகிறீர்கள். ஆனால், உங்கள் கணவர் அக்ஷய்குமார், ’ஹவுஸ்புல் 4’ படத்தில் நானா படேகருடன் நடித்து வருகிறார். இது என்ன நியாயம்? நானாவை புறக்கணிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
(டிவிங்கிள் கண்ணா)
இந்நிலையில் நடிகை கங்கனா, ’குயின்’ இயக்குனர் விகாஸ் மீது பாலியல் புகார் கூறினார். இது பரபரப்பானது. இப்படி பாலிய ல் புகார்களை எல்லோரும் வெளியே கூறத் தொடங்கிய நிலையில், இந்திய ’மீ டு ஹேஷ்டேக்’ பிரபலமாகி வருகிறது. இந்தி பட இயக்குனர் சுபாஷ் கய் மற்றும் பிரபல நடிகர்கள் மீதும் நித்தம் பாலியல் புகார் வெளிவரத் தொடங்கியுள்ளன. தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் தெரிவித்துள்ளார். அவர் மீது மேலும் சில பெண்களும் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அக்ஷய் குமார் நடிக்கும் ’ஹவுஸ்புல் 4’ படத்தின் இயக்குனர் சஜித்கான் மீது நடிகை ராச்சல் வொயிட், உதவி இயக்குனர் சலோனி சோப்ரா, பத்திரிகையாளர் கரிஷ்மா உபாத்யாய் ஆகியோர் பாலியல் புகார்களை கூறியிருந்தனர். இதை கேள்விப்பட்ட அக்ஷய்குமார் இன்று நடக்க இருந்த அந்தப் படத்தின் ஷூட்டிங்கை கேன்சல் செய்துள்ளார்.
இதுபற்றி அக்ஷய்குமார் கூறும்போது, ‘இத்தாலியில் இருந்து இப்போதுதான் இந்தியா திரும்பினேன். மீடியாவில் வந்துள்ள பாலியல் செய்திகள் அதிர்ச்சியடைய வைத்தது. அதனால் தயாரிப்பாளர்களிடம், இன்று நடக்க இருந்த ஷூட்டிங்கை கேன்சல் செய்யுமாறு கோரிக்கை வைத்துவிட்டேன். விசாரணை முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நடிக்க மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
28 வருடமாக சினிமாவில் இருக்கும் அக்ஷய்குமார் ஷூட்டிங்கை கேன்சல் செய்ய சொன்னது இதுதான் முதல்முறை. இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட முடியாது என்பதால் ஷூட்டிங்கை கேன்சல் செய்யுமாறு கூறியுள்ளாராம்.
இந்நிலையில் சஜித்கானை நீக்கிவிட்டு வேறு இயக்குனரை வைத்து படத்தை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்ப டுகிறது.