அக்‌ஷய் குமார் உடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கு கொரோனா உறுதி!

அக்‌ஷய் குமார் உடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கு கொரோனா உறுதி!
அக்‌ஷய் குமார் உடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கு கொரோனா உறுதி!

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கும் தற்போது  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நேற்று கோரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கூறியிருந்தார்.

இந்தநிலையில், கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

அபிஷேக் ஷர்மா இயக்கிவந்த ’ராம்சேது படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், படக்குழுவைச் சார்ந்த 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது ராம்சேது படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்றின் இராண்டாவது அலை அதிகமாக பரவிவரும் நிலையில், நேற்று மட்டும் 57,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com