100 ஆக்சிஜன் சிலிண்டர்களை அளித்த அக்‌ஷய்குமார் ட்விங்கிள் கன்னா தம்பதி

100 ஆக்சிஜன் சிலிண்டர்களை அளித்த அக்‌ஷய்குமார் ட்விங்கிள் கன்னா தம்பதி

100 ஆக்சிஜன் சிலிண்டர்களை அளித்த அக்‌ஷய்குமார் ட்விங்கிள் கன்னா தம்பதி
Published on

நடிகர் அக்‌ஷய் குமாரும் அவரது மனைவி ட்விங்கிள் கன்னாவும் 100 ஆக்சிஜன் சிலிண்டர்களை அளித்துள்ளனர்.

கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக அதிகம்பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத்,மத்தியப் பிரதேசம்,உத்திர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஆக்சிஜன், மருந்துகள் போன்றவை இல்லாமல் மக்கள் திணறி வருகிறார்கள்.

இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமாரும் அவரது மனைவி ட்விங்கிள் கன்னாவும் 100 ஆக்சிஜன் சிலிண்டர்களை அளித்துள்ளனர். இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ட்விங்கிள் கன்னா. ஏற்கெனவே, கெளதம் காம்பீர் அறக்கட்டளைக்கு கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவிகளை செய்ய அக்‌ஷய் குமார் 1 கோடி ரூபாய் நிவாரண உதவி அளித்திருந்த நிலையில், தற்போது 100 ஆக்சிஜன் சிலிண்டர்களை அளித்துள்ளதால் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் அக்‌ஷய் குமாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com