அஜித்தை மிரட்டியவர் அன்புச்செழியன்: சுசீந்திரன் அதிர்ச்சி தகவல்

அஜித்தை மிரட்டியவர் அன்புச்செழியன்: சுசீந்திரன் அதிர்ச்சி தகவல்
அஜித்தை மிரட்டியவர் அன்புச்செழியன்: சுசீந்திரன் அதிர்ச்சி தகவல்

‘நான் கடவுள்’ படப் பிரச்னையின்போது நடிகர் அஜித்தை மிரட்டியவர் பைனான்சியர் அன்புச்செழியன் என்று இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுசீந்திரன், “கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த அசோக்குமாரின் மரணம் கடைசி மரணமாக இருக்க வேண்டும். நான் கடவுள் பட சமயத்தில் அஜித்தை மிரட்டியவர் பைனான்சியர் அன்புச்செழியன். இது அஜீத் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் அவர் இதனை மறுக்கமாட்டார். அன்புச்செழியனால் இயக்குநர், தயாரிப்பாளர் லிங்குசாமி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளார். திரைத்துறையில் பல்வேறு தரப்பினர் அவரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அவர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால் இல்லை என மறுக்க மாட்டார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com