துப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த ரவுண்டு தேர்வான அஜித்!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த ரவுண்டு தேர்வான அஜித்!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த ரவுண்டு தேர்வான அஜித்!
Published on

40 வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் அஜித் அடுத்த ரவுண்டுக்கு தகுதியாகியுள்ளார்.

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் இரண்டாவது முறையாக வலிமை படத்தில் அடித்து வருகிறார். இதுவரை அப்டேட் எதுவும் வெளியாகாததால் தொடர்ச்சியாக ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகின்றனர்.

கிரிக்கெட் மைதானங்கள், பிரதமர் மோடி வருகையின்போதெல்லாம் அப்டேட் கேட்டு நச்சரித்தனர். இதனால், அஜித் அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டு ரசிகர்களை ஆஃப் ஆக்கினார். அதிலிருந்து அஜித் சைக்ளிங் ஓட்டுவது, ரைஃபிள் கிளப்பில் இருக்கும் புகைப்படங்கள் என சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகின்றன.

ஏற்கனவே, போனி கபூர் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதியுடன் வலிமை ஷூட்டிங் முடிந்ததாக அப்டேட் கொடுத்தார். தற்போது மோஷன் போஸ்டர் வெளியிட கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

இந்நிலையில், தற்போது ஓய்வாக இருப்பதால் அஜித் ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கிச் சுடுதலில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, வெளியாகியிருக்கும் அறிக்கையில், 40 வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் அடுத்த ரவுண்டுக்கு தேர்வாகியுள்ளார். இதனை பெருமையுடன் பகிர்ந்து அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com