நயன்தாரா மயங்கியது இதுக்குத்தானாம்!

நயன்தாரா மயங்கியது இதுக்குத்தானாம்!

நயன்தாரா மயங்கியது இதுக்குத்தானாம்!
Published on

கதையில் மயங்கிதான் படத்தில் நடிக்க சம்மதித்ததாக இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

’டிமான்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்து இயக்கும் படம், ’இமைக்கா நொடிகள்’. நயன்தாரா, அதர்வா, இந்திப் பட இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கிறார்.

படம் பற்றி அஜய் ஞானமுத்துவிடம் கேட்டபோது, ‘இது சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை கொண்ட படம். இதன் கதையை ஹீரோவை மையமாக வைத்தும் ஹீரோயினை மையமாக வைத்தும் எழுதிப் பார்த்தேன். ஹீரோயினுக்காக எழுதியபோது அழுத்தமாக இருப்பதை உணர்ந்தேன். இதையடுத்து அந்த கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு நடிகையை தேர்ந்தெடுக்க நினைத்தோம். நயன்தாராதான் பொருத்தமானவர் என்று முடிவு செய்தோம். சீரியல் கில்லர் கேரக்டருக்கு முதலில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் பேசினோம். அவரும் நடிக்க சம்மதித்தார். ஆனால், அவரது பட வேலைகளில் பிசியாகிவிட்டதால் வேறு நடிகரை தேடினோம். அப்போது முருகதாஸ் இயக்கிய இந்தி படமான, ’அகிரா’ டிரைலரைப் பார்த்தோம். அதில் அனுராக் காஷ்யப்பின் நடிப்பை பார்த்து அவரையே நடிக்க வைக்க முடிவு செய்தோம்’ என்றார்.

’நயன்தாரா உங்கள் படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார்?’ என்று கேட்டதற்கு, ’அவர் கதையில் மயங்கிதான் நடிக்க சம்மதித்தார். சிபிஐ அதிகாரி கேரக்டரில் வருகிறார். எமோஷனல் காட்சிகளும் இருக்கிறது. ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகின்றன’ என்றார் அஜய் ஞானமுத்து.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com