நடிகை மலைக்காவுடன் இணைந்தார் ஐஸ்வர்யா தனுஷ்!

நடிகை மலைக்காவுடன் இணைந்தார் ஐஸ்வர்யா தனுஷ்!
நடிகை மலைக்காவுடன் இணைந்தார் ஐஸ்வர்யா தனுஷ்!

பிரபல இந்தி நடிகை மலைக்கா அரோரா, சர்வேஷ் சஷி ஆகியோரின் யோகா நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார், ஐஸ்வர்யா ஆர் தனுஷ்!!

'3', 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், தற்போது முதலீட்டாளராக மாறியுள்ளார். இவர் 'சர்வா யோகா' நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்துள்ளார். இதன் நிறுவனர்கள், யோகா நிபுணர் சர்வேஷ் சஷி மற்றும் இந்தி நடிகை மலைக்கா அரோரா. இந்நிறுவனம் நேரடி மற்றும் டிஜிட்டல் மூலம் யோகாவால் உண்டாகும் பலனை எடுத்துரைக்கும். இந்த நிறுவனத்தில் நடிகை மலைக்கா அரோரா, நடிகர் ஷாகித் கபூர், பாப் நட்சத்திரம் ஜெனிபர் லோபஸ் உட்பட பலர் முதலீடு செய்துள்ளனர். 

சர்வா மற்றும் திவா யோகா குறித்து பேசிய ஐஸ்வர்யா தனுஷ்,  ''நவீன வாழ்க்கை முறையில், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் தினசரி போராடி வருகிறோம். மலைக்கா மற்றும் சர்வேஷின், சர்வா மற்றும் திவா யோகா பணிகளை பார்த்து வருகிறேன். ஆரோக்கியத்துடன் தொடர்புடைய எல்லாவற் றிலும் எங்கள் சிந்தனை செயல்முறைகள் எப்படி சரியாக இணைகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன், நினைவாற்றல் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகத்துக்கு நினைவூட்ட வேண்டும், என்பது சர்வாவின் குறிக்கோள், நான் இதில் முதலீடு செய்ததற்கான காரணமும் இது தான்” என்று கூறினார்.

மலைக்கா அரோரா, “ஐஸ்வர்யாவின் ஆர்வம், திவா யோகாவின் தேசிய வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்த உதவும். ஆரோக்கியம் மற்றும் முழுமையான வாழ்க்கை என்று வரும்போது, எங்கள் மூவருக்கும் ஒரே மாதிரியான எண்ணம் இருக்கின்றது, எங்களின் முயற்சிகள் சர்வா மற்றும் திவா யோகா இரண்டையும் வெற்றியின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com