திகிலில் மிரட்டும் ஐஸ்வர்யா ராஜேஷின் ’பூமிகா’ ட்ரெய்லர்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பூமிகா’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
’கனா’, ‘திட்டம் இரண்டு’ படங்களைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘பூமிகா’ படத்தில் நடித்திருக்கிறார். திகில் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தை ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். ’பூமிகா’ ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தியேட்டரிலும் இல்லாமல், ஓடிடியிலும் இல்லாமல் நேரடியாக விஜய் டிவியில் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி படம் வெளியாகிறது. பட வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருப்பதால், 23-ஆம் தேதி அன்றே நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ’பூமிகா’ வெளியாகிறது. இந்த நிலையில், இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ’நம்ம பூமி கீதே... பூமி... ஒவ்வொரு நிமிஷமும் நம்மக்கிட்ட பேசிக்கிட்டே இருக்கு. அதுத்தெளிவாச் சொல்லுது.. என்ன தெரியுமா?... என்னை எனக்கு காப்பாத்திக்கத் தெரியும் முடிஞ்சா எங்கிட்டருந்து உன்னை காப்பாத்திக்க’ போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.

