பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு: ஐஸ்வர்யா ராயுடன் சரத்குமார் குடும்பத்தினர் சந்திப்பு

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு: ஐஸ்வர்யா ராயுடன் சரத்குமார் குடும்பத்தினர் சந்திப்பு
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு: ஐஸ்வர்யா ராயுடன் சரத்குமார் குடும்பத்தினர் சந்திப்பு

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய்யை நடிகர் சரத்குமார், அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் சந்தித்து உரையாடியுள்ளனர்.

’கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்குவதே தன்னுடைய பெருங்கனவு’ என்று இயக்குநர் மணிரத்னம் பலமுறை தெரிவித்து வந்தார். தற்போதுதான், தன்னுடைய அந்தக் கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். கடந்த 2019 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் அறிவிப்பு வெளியானது. கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம், பேபி சாரா, த்ரிஷா உள்ளிட்ட பெரும் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாகும் ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. இந்த நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், கலந்துகொள்ள நடிகர் ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகளுடன் வந்துள்ளார்.

நடிகர் சரத்குமாரும் தனது குடும்பத்தினருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இந்த இரண்டுக் குடும்பங்களும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சாகமுடன் பகிர்ந்துகொண்டார் வரலட்சுமி சரத்குமார்.

”மிகப்பெரிய நடிகர் குடும்பமாக இருந்தாலும் மனத்தாழ்மையுடன் அரவணைப்புடன் நடந்துகொண்டது ஆச்சர்யமாக இருந்தது. ஐஸ்வர்யா ராயின் அன்பால் மயங்கிவிட்டேன். அவர்களை சந்தித்து நேரத்தை செலவிட்டது இனிமையான நிகழ்வு. கடவுள் ஆசிர்வாதங்களை உங்கள் குடும்பத்திற்குப் பொழிவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com