பிகில், மாஸ்டரை தொடர்ந்து விஜய்யின் அடுத்தப் படத்திலும் நடிக்கும் பூவையார்!

பிகில், மாஸ்டரை தொடர்ந்து விஜய்யின் அடுத்தப் படத்திலும் நடிக்கும் பூவையார்!
பிகில், மாஸ்டரை தொடர்ந்து விஜய்யின் அடுத்தப் படத்திலும் நடிக்கும் பூவையார்!

’பிகில்’, ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்தப் படத்திலும் ’சூப்பர் சிங்கர்’ புகழ் பூவையார் நடிக்கவிருக்கிறார்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கானா பாடல்களைப் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் சிறுவன் பூவையார். குழந்தையிலேயே தந்தையை இழந்த பூவையார் கானா பாடல்கள் மூலம் வரும் வருமானத்தில்தான் குடும்ப வறுமையை சமாளித்துக்கொண்டு அம்மாவையும் கவனித்து வருகிறார். சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி முடிந்தவுடனேயே விஜய்யின் பிகில் படத்தில் ’வெறித்தனம்’ பாடலுக்கு விஜய்யுடன் பாட வாய்ப்பு கொடுத்தார் ஏ.ஆர் ரஹ்மான். விஜய்யுடன் பாடியதோடு ஆடி குத்தாட்டம் போட்டு இன்னும் புகழ் பெற்றார் பூவையார்.

அதனைத்தொடர்ந்து, ’மாஸ்டர்’ படத்திலும் பூவையாருக்கு வாய்ப்பு கொடுத்தார் விஜய். அதில் , சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருக்கும் சிறுவனாக நடித்து நெகிழ வைத்து ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றார். தற்போது, ஹாட்ரிக்காக விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை, மகிழ்ச்சியுடன் பூவையார் தனது ட்விட்டர் பக்கத்தில் “மீண்டும் விஜய் அண்ணாவுடன் இணைந்ததில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பைக் கொடுத்த நெல்சன் திலீப் குமார் அண்ணாவுக்கு நன்றி” என்று உற்சாகமுடன் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com