“புகழ்பெற்ற இயக்குநர் ஒருவர் என்னை பாலியல் ரீதியாக அழைத்தார்”- யாஷிகா ஆனந்த் (வீடியோ)

“புகழ்பெற்ற இயக்குநர் ஒருவர் என்னை பாலியல் ரீதியாக அழைத்தார்”- யாஷிகா ஆனந்த் (வீடியோ)
“புகழ்பெற்ற இயக்குநர் ஒருவர் என்னை பாலியல் ரீதியாக அழைத்தார்”- யாஷிகா ஆனந்த் (வீடியோ)

புகழ்பெற்ற இயக்குநர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக அழைத்ததாக நடிகை யாஷிகா ஆனந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை #MeToo என்ற பிரசாரம் மூலம் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகாரை அடுத்து  இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவணப்பட இயக்குனர் லீலா மணிமேகலை, இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகாரை முன்வைத்திருந்தார். கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகாரை மீடூ மூலம் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகை ஆனந்த் புகழ்பெற்ற இயக்குநர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக அழைத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களை விட யாஷிகா மிக மெச்சூரிட்டியாக நடந்து கொண்டார் என சக போட்டியாளர்களே கூறியிருந்தனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புகழ்பெற்ற ஒரு பெரிய இயக்குநர் ஒருவரை நான் சந்திக்க சென்றேன். ஒரு ஹீரோவின் அப்பா மாதிரி அவர். பெயர் சொல்ல விரும்பவில்லை. என் அம்மா மூலம் அவர் என்னை பாலியல் ரீதியாக அணுக முயற்சித்தார். ஆனால் நேரடியாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருந்தால் நான் நிச்சயம் புகார் அளித்திருப்பேன். இதுதவிர பொதுவெளியில் என்னை இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக சீண்டினார். ஆனால் அவருக்கு நான் அந்த இடத்திலேயே பதிலடி கொடுத்தேன். என் வீடு அருகே இருந்த போலீஸ் ஒருவர் என்னை பாலியல் ரீதியாக அணுக முயற்சித்தார். அதுகுறித்து நான் காவல்துறையில் புகார் தெரிவித்தேன். சில மாதங்களுக்கு முன் சாலையில் நின்ற பெண் ஒருவரிடம் போலீசார் ஒருவர் என்ன ரேட் என கேட்கும் வீடியோ வெளியானது; அந்த பெண் நான் தான். அதுகுறித்தும் புகார் கூறியுள்ளேன். மீடூக்கான முழுமையான ஆதரவை நான் தருவேன்.” என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com