கொரோனா நோயாளிகளுக்கு உதவ ஹெல்ப்லைன் ஆரம்பித்த நடிகை வரலட்சுமி சரத்குமார்!

கொரோனா நோயாளிகளுக்கு உதவ ஹெல்ப்லைன் ஆரம்பித்த நடிகை வரலட்சுமி சரத்குமார்!
கொரோனா நோயாளிகளுக்கு உதவ ஹெல்ப்லைன் ஆரம்பித்த நடிகை வரலட்சுமி சரத்குமார்!

கொரோனா நோயாளிகளுக்கு உதவ நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆரம்பித்துள்ள ‘கோவிட் ஹெல்ப்லைன்’ மையத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.

 பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படுபவர்களைக் காக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த 2017 ஆம் ஆண்டு ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை துவங்கினார். இந்த அமைப்பின் மூலம் உறுப்புதானம் செய்வது, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவது, தெரு நாய்களுக்கு உணவு அளிப்பது போன்ற பல்வேறு உதவிகளை செய்துவரும் வரலட்சுமி சரத்குமார், தற்போது கொரோனா நோயாளிகளுக்கு உதவ “கோவிட் ஹெல்ப்லைன்” என்ற மையத்தை தனது அம்மா சாயாவுடன் ஆரம்பித்துள்ளார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கிவைத்துள்ளார். இந்த ஹெல்ப்லைனில் ஆக்சிஜன் பற்றாக்குறை, ஆம்புலன்ஸ் தேவை, ரத்தம், மருந்துகள் தேவை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவை, உணவு என கொரோனா சம்மந்தப்பட்ட எந்த உதவிக்கும் அழைக்கலாம். வரலட்சுமி சரத்குமார் இந்த ஹெல்ப்லைனை சங்கல்ப் ட்ரஸ்ட்டுடன் இணைந்து ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com