‘சுப்­ர­ம­ணி­ய­பு­ரம்’ படத்தை ரிஜெக்ட் பண்ணிட்டேன்’ – சந்தியா

‘சுப்­ர­ம­ணி­ய­பு­ரம்’ படத்தை ரிஜெக்ட் பண்ணிட்டேன்’ – சந்தியா
‘சுப்­ர­ம­ணி­ய­பு­ரம்’ படத்தை ரிஜெக்ட் பண்ணிட்டேன்’ – சந்தியா

‘சுப்­­ர­ம­ணி­ய­பு­ரம்’ படத்­தில் சுவாதி நடித்த கேரக்டரில் நடிக்க முடியாமல் போன­தற்­காக இப்­போ­தும் வருந்­து­கி­றேன் என்று நடிகை சந்தியா மனம் திறந்துள்ளார்.   

‘காதல்' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை சந்தியா. அதைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்.

திருமணத்திற்கு பிறகு திரைத்துறையில் இருந்து விலகியிருந்த சந்தியா, தற்போது தனியார் தொலைக்காட்சியில் பூர்ணிமா பாக்யராஜ், சஞ்சீவ், உள்ளிட்டோர் நடிப்பில் ஒளிப்பரப்பாகி வரும் ‘கண்மணி' தொடரின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சமீபத்தில் இவர் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள காட்சிகள் இத்தொடரில் ஒளிப்பரப்பாகியது. சின்னத்திரை உலகில் கால்பதித்தது குறித்து மனம்திறக்கிறார் சந்தியா... 

நான் மீண்டும் நடிக்க வருவதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால் நான் எப்போதும் நடிப்பை விரும்புகிறேன். நான் ஒருபோதும் திரைப்படங்களுக்குப் பின் சென்றதில்லை. ஆனால் நல்ல கேரக்டர்களை விடமாட்டேன்.

திருமணமான உடனேயே நான் ‘கன்சீவ்’ ஆகிவிட்டேன். அதனால் அடுத்தடுத்த வருடங்கள் பிசியாகவே நகர்ந்தன. என் மகள் ஷேமா உடன் இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் நான் நேசித்தேன். இப்போது, அவளுக்கு நான்கு வயது. அதனால் சூட்டிங்கை தொடர எனக்கு ஒரு சுதந்திரம் கிடைத்துள்ளது.

நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான சுஜாதா மேடமும் நானும் பல ஆண்டுகளாக தொடர்பில் இருக்கிறோம். ‘கண்மணி’ தொடரில் ஒரு கெஸ்ட் ரோலில் வந்து நடிக்க என்னிடம் கேட்டார். எனக்கும் ஒரு ‘கம்பேக்’ கொடுக்க வேண்டும் என்ற ஒரு ஆர்வம் இருந்தது.

என் மகளுடன் அதிக நேரம் செலவிடுவதையே நான் விரும்புகிறேன். அதனால் ‘சீரியல்’ அதற்கொரு வசதியாக இருக்கும். அதற்காக மற்ற வாய்ப்புகளை நான் கதவடைத்துக் கொள்ளவில்லை.

சினி­மா­வில் எனது முதல் சுற்­றில் அதி­கம் சாதிக்க முடி­ய­வில்லை என்ற வருத்­தம் இன்­ற­ள­வும் உள்ளது. நான் எடுத்த சில தவ­றான முடி­வு­கள் பின்­ன­டைவை ஏற்படுத்தி விட்டது.

‘சுப்­­ர­ம­ணி­ய­பு­ரம்’ படத்­தில் சுவாதி நடித்த கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க முடியாமல் போன­தற்­காக இப்­போ­தும் வருந்­து­கி­றேன். சசி­கு­மார் சார் தேடி வந்து கதை­யைச் சொன்­னார். எனக்கும் பிடித்­தி­ருந்­தது. எனி­னும் தயங்­கி­னேன். வாய்ப்பை ஏற்க மறுத்ததால் சசி­கு­மார் சாருக்கு என் மீது கோபம், வருத்­தம் இருந்­தி­ருக்­கும். அவர் மன­தைக் காயப்­ப­டுத்தி இருந்­தால் அதற்­காக மனதார மன்­னிப்­புக் கேட்­டுக்­கொள்­கி­றேன்'' என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com