சினிமாவிலிருந்து விலகுகிறார் நடிகை சனா கான்

சினிமாவிலிருந்து விலகுகிறார் நடிகை சனா கான்
சினிமாவிலிருந்து விலகுகிறார் நடிகை சனா கான்

இந்தி பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் புகழ்பெற்றவர் நடிகை சனா கான். தமிழிலும் சிலம்பாட்டம், தம்பிக்கு எந்த ஊரு உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். அவர் தற்போது சினிமாவை விட்டு விலகி சேவை செய்யப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். இதுதான் தன் வாழ்க்கையில் முக்கியமான சந்தர்ப்பம் என்று அவர் கூறியுள்ளார்.

’’நான் பல வருடங்களாக இந்த சினிமாத் துறையில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறேன். தற்போது புகழ், மரியாதை மற்றும் செல்வம் என அனைத்தும் கிடைத்திருக்கிறது. நான் எனது ரசிகர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். இன்றிலிருந்து நான் என சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். என்னை படைத்தவரின் ஆணைக்கு இணங்க இன்றிலிருந்து சமூக சேவை ஆற்றப்போகிறேன்.

நான் எனது படைப்பாளரின் கட்டளைகளை கைக்கொண்டு நடக்க வேண்டுமென எனது சகோதர, சகோதரிகள் எனக்காக வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்குப் பிறகு சினிமா தொடர்பான என்னை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com