போதை பொருள் விவகாரம்: நடிகை ரகுல் ப்ரீத்திடம் SORRY சொன்ன சமந்தா.!

போதை பொருள் விவகாரம்: நடிகை ரகுல் ப்ரீத்திடம் SORRY சொன்ன சமந்தா.!

போதை பொருள் விவகாரம்: நடிகை ரகுல் ப்ரீத்திடம் SORRY சொன்ன சமந்தா.!
Published on

தென்னிந்திய சினிமாவின் ஃபிட்டான நாயகிகளில் ஒருவரான நடிகை சமந்தா சக நடிகை ரகுல் ப்ரீத்திடம் SORRY சொல்லியுள்ளார். 

பாலிவுட் நடிகர் சுஷாந்திற்கு போதை பொருள் கொடுத்ததாக அண்மையில் அவரது காதலியும் நடிகையான ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் சக்கரவர்த்தி மற்றும் சுஷாந்த் வீட்டை நிர்வகித்து வந்த மேலாளர் சாமுவேல் மிரண்டாவை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அண்மையில் கைது செய்தனர்.

இந்நிலையில் ரியாவிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் பாலிவுட் நடிகர் மற்றும் நடிகையர்கள் பலர் போதை பொருள் பயன்படுத்துபவர்கள் என சொன்னதாக தகவல் பரவியது. இதில் நடிகை ரகுல் ப்ரீத் மற்றும் சாரா அலி கானின் பெயரும் அடிபட்டது. 

அதனையடுத்து தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் இயக்குனர் மல்ஹோத்ரா அந்த தகவல் பொய்யானது என தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த விவகாரத்தில் தவறுதலாக சேர்க்கப்பட்ட நடிகர், நடிகையர்களிடம் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை சமந்தா தனது வருத்தத்தை நடிகை ரகுல் ப்ரீத் மற்றும் சாரா அலிகானுக்கு தெரிவித்துள்ளார். 

இன்ஸ்டாகிராமில் #SorryRakul, #SorrySara என சமந்தா அவர்களுக்கு ஆறுதல் சொல்லியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com