'கொலை மிரட்டல் விடுக்கிறார்' - உதவி ஆய்வாளர் மீது நடிகை ராதா மீண்டும் புகார்

'கொலை மிரட்டல் விடுக்கிறார்' - உதவி ஆய்வாளர் மீது நடிகை ராதா மீண்டும் புகார்

'கொலை மிரட்டல் விடுக்கிறார்' - உதவி ஆய்வாளர் மீது நடிகை ராதா மீண்டும் புகார்
Published on

தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் நடித்த நடிக்கை ராதா குற்றம்சாட்டியுள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா தன்னை ஏமாற்றியதாக ராதா கடந்த மாதம் அளித்த புகார் குறித்து வடபழனி காவல்நிலையத்தில் மூன்றரை மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடைபெற்றது.

இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தாம் அளித்த புகாரைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர்கள் பாரதி மற்றும் இளம்பரிதி ஆகியோர் சமாதானம் செய்ததாக குறிப்பிட்டார்.

இதையேற்று வசந்தராஜாவும் தானும் காவல்நிலையத்தில் எழுதி கொடுத்ததாகவும், ஆனால் அதன்பின்னரும் வசந்தராஜா தன்னுடன் சேர்ந்து வாழவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இருவரும் எழுதிக்கொடுத்த கடிதங்களை உதவி ஆய்வாளர்கள் பாரதி, இளம்பரிதி ஆகிய இருவரும் மறைத்து விட்டதாகவும் நடிகை ராதா கூறினார். தமக்கு வசந்தராஜா தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com