சாமிதோப்பு கோயிலில் நயன்தாரா தரிசனம்..!

சாமிதோப்பு கோயிலில் நயன்தாரா தரிசனம்..!
சாமிதோப்பு கோயிலில் நயன்தாரா தரிசனம்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.

நடிகை நயன்தாரா தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தில் குமரி பகவதியம்மன் வேடத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் விரதம் இருந்து வருகிறார். இந்தப் படத்தினை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். இதற்கான படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நயன்தாரா, அங்குள்ள முக்கிய திருக்கோயில்களில் சாமிதரிசனம் செய்து வருகிறார். கடந்த வாரம் கன்னியாகுமரி பகவதியம்மன் திருக்கோயில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், நாகராஜா கோயில் மற்றும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் இரணியல், திங்கள் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். 

இந்நிலையில் நேற்று மாலை சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்ய வந்த அவரை பாலஜனாதிபதி வரவேற்று பதியினுள் அழைத்துச் சென்றார். கொடிமரத்தை ஐந்து முறை வலம் வந்த அவர், சுற்று பிரகாரத்தை ஒருமுறை சுற்றினார். பின்னர் பள்ளியறையை ஐந்து முறை சுற்றிவந்து தரையில் அமர்ந்து பக்தியுடன் வழிபட்டார். 

தற்போது திருஏடு வாசிப்பு திருவிழா நடப்பதால் ஒரு மணிநேரம் அமர்ந்து ஏடுவாசிப்பு தொடங்கிய பின்னர், பதி முன்பு நின்ற ரசிகர்களுடன் போட்டோ மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com