பிடிவாரண்ட் கொடுத்த நீதிமன்றம் - மீண்டும் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன்!

பிடிவாரண்ட் கொடுத்த நீதிமன்றம் - மீண்டும் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன்!
பிடிவாரண்ட் கொடுத்த நீதிமன்றம் - மீண்டும் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன்!

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டார்.

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர். அதன்பின்பு, இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், அவரை கைது செய்து ஏப்ரல் 4ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், தற்போது மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com