“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு

“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு

“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு

தான் எந்த வித தற்கொலை மிரட்டலும் விடவில்லை என்றும், தன்மீது கொடுக்கப்பட்டிருப்பது பொய் புகார் என்றும் நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.

நடிகை மதுமிதா மீது தனியார் தொலைக்காட்சியில் நிறுவனம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதுமிதா, “தொலைக்காட்சி நிர்வாகம் உங்கள் பணத்தை விரைவில் தருகிறோம். இன்வாய்ஸ் கொடுத்துவிடுங்கள் என்றனர். எனது கணவரும் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு சென்று இன்வாய்ஸ் கொடுத்துவிட்டு வந்தார். ஆனால் எதற்காக அவர்கள் புகார் கொடுத்தார்கள் என தெரியவில்லை.

இப்படி ஒரு பொய் புகாரை அவர்கள் கொடுத்தார்கள் என்பது எனக்கே கேள்வி தான் ? இதனை அந்த தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும், கமல்ஹாசனும் பேசி தான் ஒரு தீர்வு காண வேண்டும். டீனா என்வருக்கு நான் தனிப்பட்ட முறையில் நிறைய மெசேஜ்களை அனுப்பியுள்ளேன். ஆனால் அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது உண்மை” என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com