நடிகையிடம் அனுமதியின்றி ரத்த மாதிரியை எடுக்கக்கூடாது - நீதிமன்றம்

நடிகையிடம் அனுமதியின்றி ரத்த மாதிரியை எடுக்கக்கூடாது - நீதிமன்றம்
நடிகையிடம் அனுமதியின்றி ரத்த மாதிரியை எடுக்கக்கூடாது  - நீதிமன்றம்

போதை பொருள் விவகாரத்தில் நடிகை சார்மியின் ரத்தம்,முடி,நகம் உள்ளிட்ட மாதிரிகளை அவரின் அனுமதியின்றி சேகரிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

போதை பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ள தெலுங்கு நடிகர்களிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இதில் நடிகை சார்மிக்கும் நோட்டீஸ் அனுப்பட்ட நிலையில், தன்னை பெண் அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர், ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் விசாரணையின் போது பெண் அதிகாரி உடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதே நேரத்தில் வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சோதனைக்காக சார்மியின் ரத்தம், முடி, நகம் உள்ளிட்ட மாதிரிகளை அவரது அனுமதியின்றி எடுக்கக்கூடாது என்றும் விசாரணைக் குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com