'அன்பு காட்டுங்கள்' - செல்லப்பிராணிகள் பற்றிய ஆண்ட்ரியாவின் இன்ஸ்டா பதிவு!

'அன்பு காட்டுங்கள்' - செல்லப்பிராணிகள் பற்றிய ஆண்ட்ரியாவின் இன்ஸ்டா பதிவு!
'அன்பு காட்டுங்கள்'  - செல்லப்பிராணிகள் பற்றிய ஆண்ட்ரியாவின் இன்ஸ்டா பதிவு!

தன் வீட்டில் வளரும் மூன்று செல்லப்பிராணிகள் குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் எழுதியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா. 

முதல் நபரின் பெயர் பெக்கி. அம்மாவின் பாசக்கூட்டத்தில் சமீபத்தில் சேர்ந்தது. அம்மாவின் செல்லம். அதை ஒரு நாள் எங்கள் தெருவில் பார்த்து, வீட்டுக்குத் தூக்கிவந்தார் சலவைத்தொழிலாளி. பெக்கி அதிகம் உற்சாகம் கொண்டது.  அதை போட்டோ எடுக்கவே முடியாது. துள்ளிக் குதிக்கும். சிறிய சிவப்பு பந்தை கேட்ச் பிடித்து விளையாடு பெக்கிக்கு ரொம்பப் பிடிக்கும்.

அடுத்த நபர் ரிங்கோ. இசைக்கலைஞர் ரிங்கோ ஸ்டாரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு வந்தது. படப்பிடிப்பின்போது என் கேரவேனில் நான் அதை கண்டெடுத்தேன். பெக்கியிடமிருந்து சிவப்புப் பந்தை பறித்துச் செல்வதுதான் அதற்கு மிகவும் பிடித்த விளையாட்டு.  

மூன்றாவது நபர் ராக்கோ. இவர் ரொம்பவும் சீனியர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பரிசாக வந்தது. குறட்டை விடுவதில் அப்பாவுக்கும் அதுக்கும் ஒரு போட்டியே வைக்கலாம்.

இந்த மூன்று செல்லப்பிராணிகளையும் பற்றி குறிப்பிட்டுள்ள நடிகை ஆண்ட்ரியா, ஒருவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்வதால் எல்லாம் தெரியும் என்று நினைத்துவிடாதீர்கள். மனநோய் முதல் மாங்க்ரல் நாய்க்குட்டிகள் வரையில் உங்களுக்கு ஒரு க்ளுவும் கிடைக்காமல் இருக்கலாம். எனவே யாரையும் உடனே தீர்ப்பிடாதீர்கள். மாறாக அன்பு காட்டுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com