ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது... நடிகர் விவேக் கருத்து

ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது... நடிகர் விவேக் கருத்து
ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது... நடிகர் விவேக் கருத்து

ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

உலகமே நம் மாணவர் அறப்போராட்டத்தை உச்சி முகர்கிறது என்றும் அதற்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் தெரிவித்துள்ளார்.களத்தில் இருக்கும் மாணவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியும். தனிநபரை கொச்சைபடுத்தும் கோஷங்கள், தேசியக்கொடி அவமதிப்பு போன்றவை நிகழக்கூடாது நிதானம் அவசியம் என்றும் கூறியுள்ளார்.மற்றொரு பதிவில், நீங்கள் அனைவரும் கலாமின் சீடர்கள் என்றும், இப்போது அவர் இருந்தால் என்ன முடிவெடுப்பார் என்றும் கேட்டுள்ளார். எனவே யோசித்து செயல்படுங்கள் கண்மணிகளே என்று நடிகர் விவேக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டம் திசை மாறுகிறது என ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முகநூலில் வீடியோ பதிவிட்டுள்ள ஆதி, தனித் தமிழ்நாடு, மோடி எதிர்ப்பு, தேசியக்கொடி அவமதிப்பு என போராட்டம் திசைமாறி வருவதாகவும். போராட்டத்துக்கான நோக்கம் திசைமாறி செல்வதால் உண்மையாக போராடியவர்கள் வேதனை அடைந்துள்ளதாக ஆதி தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com