சமூகக் கருத்துக்களைச் சொன்ன நடிகர் விஜய்க்கு பாராட்டு: விஷால் அறிக்கை

சமூகக் கருத்துக்களைச் சொன்ன நடிகர் விஜய்க்கு பாராட்டு: விஷால் அறிக்கை

சமூகக் கருத்துக்களைச் சொன்ன நடிகர் விஜய்க்கு பாராட்டு: விஷால் அறிக்கை
Published on

மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துக்களை சொன்ன நடிகர் விஜய்க்கு நன்றியும் பாராட்டுகளும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும்,  தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளருமான விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளும்!. மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் அந்த வசனங்களையும் காட்சிகளையும் நீக்க சொல்லி வற்புறுத்துவதும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன். ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். 

இங்கே எல்லோரையும் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம். ஒரு அரசியல் கட்சி ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளையும் வசனங்களையும் தீர்மானித்தால் பின்னர் சென்சார் போர்டு என்பது எதற்கு இருக்கிறது? சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்யச் சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. தான் நினைத்ததை சொல்லும் முழு கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. சமூக அக்கறையுள்ள எங்களுக்கும் அது இருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com