திரைத்துறையை விட்டு விலகுவதாக வெளியான தகவலுக்கு விக்ரம் தரப்பு மறுப்பு

திரைத்துறையை விட்டு விலகுவதாக வெளியான தகவலுக்கு விக்ரம் தரப்பு மறுப்பு
திரைத்துறையை விட்டு விலகுவதாக வெளியான தகவலுக்கு விக்ரம் தரப்பு மறுப்பு

திரைத்துறையை விட்டு விலகுவதாக வரும் செய்தி உண்மையில்லை என நடிகர் விக்ரம் தரப்புபு தெரிவித்துள்ளது.

சினிமா வாழ்க்கையில் நிறையப் போராட்டங்களுக்குப் பிறகு முன்னேறி வந்தவர் விக்ரம். அவரது அர்ப்பணிப்பு மிக்க நடிப்பால் அவர் தன்னை ஒரு முன்னணி நடிகராகத் தமிழ் சினிமாவில் தக்க வைத்துக் கொண்டார். மேலும் தனது நடிப்புத் திறமைகளால் தேசிய விருது, பிலிம்பேர் விருது எனப் பல விருதுகளை வென்றுள்ளார்.

விக்ரம் தற்போது இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் 'கோப்ரா' படத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் இந்தப் படத்திற்காக 20-க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விக்ரம் இனிமேல் தனது மகன் துருவ் விக்ரமின் திரை வாழ்க்கை எதிர்காலம் குறித்து கவனம் செலுத்த உள்ளதாகவும் ஆகவே அவர் நடிப்பிலிருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் தற்போது விக்ரம் தரப்பு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. விக்ரம் திரைத்துறையை விட்டு விலகுவதாக வரும் செய்தி உண்மையில்லை என அவரது மேனேஜர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com