’மகான்’ 100 வது நாள்:  ‘கோப்ரா’ ரிலீஸ் தேதியை அறிவிக்கும் படக்குழு

’மகான்’ 100 வது நாள்: ‘கோப்ரா’ ரிலீஸ் தேதியை அறிவிக்கும் படக்குழு

’மகான்’ 100 வது நாள்: ‘கோப்ரா’ ரிலீஸ் தேதியை அறிவிக்கும் படக்குழு
Published on

‘கோப்ரா’ படத்தின் ரிலீஸ் அப்டேட்டைக் கொடுத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் விக்ரமின் ‘கோப்ரா’ படமும் ஒன்று. அருள்நிதியின் ’டிமாண்டி காலனி’, நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். நாயகியாக ’கேஜிஎஃப்’ ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார்.

’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ள ’கோப்ரா’ படப்பிடிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. ஆனால், படத்திற்கான கதையை முழுமையாக இயக்குநர் முடிக்காத காரணத்தால் படப்பிடிப்பு நீடித்துக் கொண்டே சென்றது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், வெளியீட்டுத் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த நிலையில், ‘கோப்ரா’ படத்தின் வெளியீட்டுத் தேதியை நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று லலித்குமாரின் செவென் ஸ்கிரீன் ஸ்டூடியோ தற்போது தெரிவித்துள்ளது. இதனால், விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

விக்ரம் நடிப்பில் கடைசியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘மகான்’ கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது. ’மகான்’ வெளியாகி நாளையுடன் 100 நாட்கள் ஆகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் நாளை ‘கோப்ரா’ ரிலீஸ் அப்டேட்டைக் கொடுக்கிறது படக்குழு. விக்ரம் ரசிகர்களுக்கு இது டபுள் ட்ரீட் கொண்டாட்டம்தான். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com