மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் விஜய் சேதுபதி!

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் விஜய் சேதுபதி!

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் விஜய் சேதுபதி!
Published on

கன்னட சினிமாவின் உச்ச திரை நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வாரம் மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் பெங்களூர் சென்றிருந்த நடிகர் விஜய் சேதுபதி, புனித ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதோடு புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் சினிமா நடிகர் சிவகார்த்திகேயன், புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, படப்பிடிப்புக்காக பெங்களூர் சென்றிருந்த நடிகர் விஜய் சேதிபதியை விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. விமான நிலையத்தில் உதவியாளர்கள் மற்றும் காவலர்களுடன் விஜய் சேதுபது நடந்து சென்று கொண்டிருக்க திடீரென அங்கு வரும் ஒருவர் ஏறி காலால் உதைப்பது போல் அந்த வீடியோ உள்ளது. ஆனால், விஜய்சேதுபதி மீது அடி விழுந்ததா என தெரியவில்லை. ஆனால், அப்போது விஜய்சேதுபதி நிலைகுலைந்து போனார். 

காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விஜய்சேதுபதியின் உதவியாளர் தான் தாக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. விஜய் சேதுபதிக்கு வழி ஏற்படுத்தும் முயற்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவர் தாக்கப்பட்டார் என தெரிகிறது. இந்த விவகாரத்தில் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com