சத்தமின்றி ரூ.15 லட்சம் நிதியுதவி செய்த நடிகர் விஜய்
மெர்சல் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் விஜய், எந்தவித விளம்பரமும் இன்றி தென்னிந்திய நடனக்கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
அண்மையில் விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் வெளியான படம் மெர்சல். இந்தப் படத்தில் ஜிஎஸ்டி குறித்தும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விமர்சன வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு தமிழக பாஜக தலைவர்கள் பலரும் எதிர் கருத்து தெரிவிக்க, அதன்மூலம் படத்திற்கு பெரும் விளம்பரம் ஏற்பட்டு படம் வசூலைக் குவித்தது. பின்னர் பாஜகவினரின் கருத்திற்கு, அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்க் கருத்து தெரிவித்தனர். இவ்வாறாக மெர்சல் படம் ஒரு பெரும் வெற்றிப்படமானது.
இந்த சூழலில் மெர்சல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் தென்னிந்திய நடனக்கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கியுள்ளார். விஜய் வழங்கிய இந்த நிதித்தொகை, நடனக்கலைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.