நாளை மறுநாள் ஓடிடியில் வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’

நாளை மறுநாள் ஓடிடியில் வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’
நாளை மறுநாள் ஓடிடியில் வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’

நடிகர் விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு ஓடிடியில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. ஆத்மிகா ஹீரோயினாக நடிக்க வில்லனாக ’கேஜிஎஃப்’ வில்லன் ’கருடன்’ ராமச்சந்திர ராஜு நடித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை பரவலால் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது.இதனையொட்டி, ‘கோடியில் ஒருவன்’ வெளியானது.

கொரோனா இரண்டாவது அலைக்குப்பிறகு தியேட்டர்களில் வெளியான படங்களில் ’கோடியில் ஒருவன்’ நல்ல வசூலைக் கொடுத்தது என்று சினிமாத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஒரு மாதம் கழித்து வரும் அக்டோபர் 25 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘கோடியில் ஒருவன்’ வெளியாகிறது. இதனை விஜய் ஆண்டனி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com