வீட்டிலேயே சூதாட்ட கிளப் : நள்ளிரவில் சிக்கிய நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட 13 பேர் கைது..!

வீட்டிலேயே சூதாட்ட கிளப் : நள்ளிரவில் சிக்கிய நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட 13 பேர் கைது..!
வீட்டிலேயே சூதாட்ட கிளப் : நள்ளிரவில் சிக்கிய நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட 13 பேர் கைது..!

சென்னையில் நடிகர் ஷியாம் உள்பட 13 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடப்பதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நுங்கம்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி தலைமையிலான போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.

அப்போது கிளப்போல வீட்டிற்குள்ளேயே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த நடிகர் ஷ்யாம் உட்பட 13 பேரை நுங்கம்பாக்கம் போலீசார் பிடித்தனர். இதனை நடத்தி வந்தது நடிகர் ஷியாம் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

விசாரணையில் நடிகர் ஷியாமின் சொந்த வீட்டில்தான் சூதாட்டம் நடந்துள்ளது என தெரிய வந்தது. மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த இன்சூரன்ஸ் அதிகாரி கோநி கிருஷ்ணன், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த உணவக உரிமையாளர் சித்தார்த், சாஸ்திரி நகரைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ஆனந்த், குரோம்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்த கிஷோர், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் உணவக உரிமையாளர் பட்டேல், புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வசந்த் (ஷ்யாம் வீட்டு வேலைக்காரர்), வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மணி (ஷ்யாம் வீட்டு வேலைக்காரர்), பெரியமேட்டைச் சேர்ந்த வீட்டு துப்புரவு பணியாளர் பக்ரூபா, அடையாறு பகுதியைச் சேர்ந்த ஏற்றுமதி தொழில் அதிபர் நசீர், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஜூஸ் கடை உரிமையாளர் பாலாஜி, அண்ணாநகரைச் சேர்ந்த என்ஜினியர் சைமன், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன தொழில் அதிபர் கவுசிக் ஆகிய 13 பேரை நுங்கம்பாக்கம் போலீசார் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடியதாக கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர்கள் வெளியே வந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com