“கோட்சே வெறும் துப்பாக்கிதான்” - பெரியாரின் கருத்தை சுட்டிக்காட்டி சூர்யா பேச்சு

“கோட்சே வெறும் துப்பாக்கிதான்” - பெரியாரின் கருத்தை சுட்டிக்காட்டி சூர்யா பேச்சு
“கோட்சே வெறும் துப்பாக்கிதான்” - பெரியாரின் கருத்தை சுட்டிக்காட்டி சூர்யா பேச்சு

காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான் என பெரியார் கூறியதை நடிகர் சூர்யா நினைவுகூர்ந்துள்ளார். சென்னையில் நடைபெற்ற காப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் பெரியாரின் கருத்தை நினைவுகூர்ந்தார்.

இதுகுறித்து சூர்யா பேசிய போது, “கோட்சே காந்தியை சுட்ட பிறகு வன்முறை வெடித்தது. கோட்சேவின்‌ துப்பாக்கியை உடைக்கும்படி பெரியார் கூறினார். கோட்சே வெறும் துப்பாக்கிதான் என்பது பெரியாரின் கருத்து. ஒரு நிகழ்வின் பின் ஒரு சித்தாந்தம் உள்ளது என பெரியார் கூறினார்” என்றார்.

அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்கள் கல்வி கற்க உதவி வரும் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்தும், நீட்த் தேர்வு குறித்தும் அண்மையில் தெரிவித்த கருத்து அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. சூர்யாவின் பேச்சு பிரதமர் மோடிக்கு கேட்டு விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கோட்சே குறித்த பெரியாரின் கருத்தை சூர்யா சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது கோட்சே குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com