இரண்டு ஓடிடி தளங்களில் வெளியானது சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’

இரண்டு ஓடிடி தளங்களில் வெளியானது சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’
இரண்டு ஓடிடி தளங்களில் வெளியானது சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

'ஜெய் பீம்’ வெற்றிக்குப்பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ கடந்த மார்ச் 10 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கிறார். சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு தியேட்டரில் வெளியான சூர்யா படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு இருந்தது. அதனை நிறைவேற்றும் விதமாகவே சூர்யா ரசிகர்கள் இதயங்களில் இடம்பிடித்து பாராட்டுக்களைக் குவித்தது. ’எதற்கும் துணிந்தவன்’ பெண்களுக்கு எதற்கும் துணியும் துணிச்சலைக் கொடுத்தது என்று பலரும் கொண்டாடினார்கள். அதேசமயம், சினிமா விமர்சகர்கள் இப்படம் தங்களை ஈர்க்கவில்லை என்று கலவனையான விமர்சங்களையும் கொடுத்தனர்.

இந்த நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ ஒரு மாதம் கழித்து இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியிருந்தது. படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸின் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் நெட்ஃப்ளிக்ஸிலும் இன்று ‘எதற்கும் துணிந்தவன்’ வெளியாகியுள்ளது. இதனை, அதகாரப்பூர்வமாக சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com